Sunday, February 23, 2020

கவிதை


குட்டி நிலவுகளை
ஒட்டி வைத்தது போல்
இரு கண்கள்...!
களவெடுத்து வானவில்லில்
கறுப்பு வண்ணமிட்டது போல்
இரு புருவங்கள்...!
தங்க கிண்ணங்கள் இரண்டு,
உன் அங்கத்தில்
இரு கன்னங்களாய்...
தேன் கூட்டில்
மவுன பூட்டுகளாய்
உன் உதடுகள்...!
உன் மவுனம் கலைக்கும்
முயற்சிகளில்
உன்னை நான்
ரசிக்கவும் தவறவில்லை...!
என் பார்வைகள்
உன்னை உரச,
உன் தாவணி கோபுரத்தில்
தடுக்கி விழுந்த
என் கண்களை - நீ
தண்டிப்பது எப்போது...?
இன்னும்
மவுனத்தாலே
பேசிக்கொண்டிருக்கிறாய் நீ...
உயிர் மெய்கள்
உன் உள் நாக்கிலே
உயிர்விட
நானோ
செத்துப்பிழைக்கிறேன்...!
உன் சிறு துளி மவுனம்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்ல துடிக்க,
இன்னும் எனக்கு
மெல்ல மெல்ல
உயிர் தந்து கொண்டிருக்கிறது
உன் ஒரு துளி புன்னகை....

No comments:

Post a Comment